Title Title

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம்

புதுச்சேரியில் புதிய அரசியல் கட்சி தொடக்கம் 
புதுச்சேரி மாநிலத்தின் விடுதலை தினமான நவம்பர் முதல் நாள் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
அதன் தொடக்க விழா விடுதலைக்கு வித்திட்ட கீழூர் கிராமத்தில் நடைபெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ் புதிய கட்சியைத் தொடங்கி வைத்து அதன் கொடியையும் கொள்கைகளையும் அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

கட்சியின் சேர்மன் வெங்கட்ராமன் தலைமை உரையாற்றினார். துணைத் தலைவர்  பொறியாளர் த.இரவி வரவேற்றுப்  பேசினார். பொதுச் செயலாளர் பேராசிரியர் எ.மு.ராஜன் மற்றும் ரகோத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பொருளாளர் முனைவர் பெண்ணியம் செல்வகுமாரி நன்றி உரையாற்றினார். தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் 
ப. பரந்தாமன் மற்றும் பேராசிரியர் தணிகாசலம் ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். விழாவில் புதுவை நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புற பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்புத்தனர.